ARVI LYRICS
Wednesday, November 17, 2010
மௌன வார்த்தைகள்
மலர்கள் மலரும் ஓசை கேட்டு பழகி போன
எனக்கு
உன் இதழ் பேசா வார்த்தைகள் தெரிய வாய்ப்பில்லை
இருந்தும்
உன் இமை மூடும் நேரங்களின் எல்லா
வார்த்தைகளும் புரிகிறது .
Thursday, November 11, 2010
24x7
பேசி கொண்டே இருக்கிறாய்
உன் வழி காட்டுதளில் நான் ....
உன் வழி எங்கும் நான் .
Thursday, November 4, 2010
தீபாவளி
படர்கிறது
தேகம் எங்கும் புத்தாடைகளாகவும்,
நாவில் இனிப்பு சுவையும்,
விரலால் வெடி ஓசைகளாகவும்,
செவி முழவதும் வாழ்த்துகளாகவும்,
விழியில் வண்ண வான வேடிக்கைகளாகவும்,
நாசிகளால் நிம்மதி பெரு முச்சுடன்
நகர்கிறது நிமிடங்கள் .......!
என் வானத்தை
வாசம் செய்யும் அனைவர்க்கும்
தீப
திரு
நாள்
வாழ்த்துகள் .....!
Monday, November 1, 2010
GYM
பணம் பெற
உழைத்து கொட்டிய
வியர்வை
பணம் கொடுத்து கொட்டுகிறது...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
மார்கழி
ஊட்டியின் குளிர் என் சாலையெங்கும் பரவிக்கிடக்கிறது....!