ஏனோ ஏனோ
உன்னாலே
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
துரத்தும் கனவுகளும்
தீராத நினைவுகளும்
என்னுள் நகர்ந்து இயக்குகிறது
கண்ணை மூடி
கவிதை பாடி நகரும் நாட்கள்......
ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே
அவளின் புன்னகை யாவும்
காற்றில் கலந்து இசையாய்
என்னுள் எங்கும் ஒலிக்கிறது....
தினம் தினம்
பூக்கும் மலராய்
வண்ணங்களாய் ஒளிர்கிறது....
ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே
சுவாசத்திலும் நல்ல
வாசம் தந்து
என் வாழ்வின் வாசனை மாற்றினாய்...
உன் பார்வையில்
பல கதைகள் சொல்லி
என்னுள் அமர்கிறாய்.....
ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே